முருகப்பெருமானின் மிகவும் சக்தி வாய்ந்த மகா மந்திரம் வேல் மாறல். அதில் மிகவும் முக்கியமான நான்கு வரிகள் உண்டு.
வேல் மாறல்:
"திருத்தணியில் உதித்து அருளும்
ஒருத்தன் மலை விருத்தன் எனது
உளத்தில் உறை கருத்தன் மயில்
நடத்து குகன் வேலே."
மகா மந்திரமான வேல் மாறலை முழுமையாக படிக்க நேரம் இல்லாதவர்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ள அந்த நான்கு வரியான மந்திரத்தை சொன்னால், முழு வேல் மாறல் படித்தால் எவ்வளவு பலன் கிடைக்குமோ, அதே அளவு பலன் இந்த நான்கு வரிகளில் கிடைக்கும்.
முருகப்பெருமானை மனதார நினைத்து வேல் மாறல் மகா மந்திரத்தை சொன்னாலோ, ஜபித்தாலோ, கேட்டாலோ, அல்லது எழுதினாலோ உங்கள் வேண்டுதல்கள் நிறைவேறும். இதை 21 நாள் தொடர்ந்து செய்து பாருங்கள் நிச்சயம் கை மேல் பலன் உண்டு.
இந்த அற்புதமான மகா மந்திரத்தின் நான்கு வரிகள், 108 முறை, ஒரே வீடியோவில் இருக்கிறது. நிச்சயமாக கேளுங்கள் கேட்டு பயன் பெறுங்கள்.
"ஈசன் ஆசிப்பெற்றவள்" யூடூப் பக்தி சேனனில் முருகப்பெருமானின் நிறைய சக்தி வாய்ந்த மந்திரங்கள், கந்த சஷ்டி கவசம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், அருணகிரிநாதர் அருளிய முருகன் மந்திரம் போன்ற நிறைய மந்திரங்கள் உள்ளன. அனைவரும் கேட்டு முருகப்பெருமானின் குருவருள் திருவருள் பெற வேண்டுமென்று வேண்டி கொள்வோம்.
Like, share, comment and subscribe👍
Thankyou All

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக